Wednesday, June 23, 2021

ஒரு குட்டி கதை

 ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.

“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன். அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன். அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை. “தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது. இனி எனக்கு வெறும் பாலும் வேண்டாம், வெறும் சர்க்கரையும் வேண்டாம். சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன். சிறு கதைகளைச் சொல்லிப் பெரிய தத்துவங்களை விளக்குவதில் வல்லவர் பராசர பட்டர்.

இக்கதையைச் சொன்ன பராசர பட்டர், “திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை. மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை. ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும்.


எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்த சிறுவன், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ, அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை!” என்று கதைக்குப் பின் உள்ள தத்துவதை விளக்கினார். மேலும், “நரசிம்மர் சேராதவற்றை எல்லாம் சேர்ப்பவர்.
மனிதனையும் மிருகத்தையும் இணைக்க முடியுமா? பகலையும் இரவையும் இணைக்க முடியுமா? பூமியையும் வானத்தையும் இணைக்க முடியுமா? வீட்டின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இணைக்க முடியுமா? உயிருள்ள பொருளையும் உயிரற்ற பொருளையும் இணைக்க முடியுமா? கருணையையும் கோபத்தையும் இணைக்க முடியுமா? இவை அனைத்தையும் இணைத்தவர் நரசிம்மர்.

சிங்கம், மனிதன் இரண்டும் கலந்த நரசிம்ம வடிவில் தோன்றி மனிதனையும் மிருகத்தையும் சேர்த்தார். பகலும் இரவும் இணையும் பொழுதான சந்தியாகாலத்தில் தோன்றிப் பகலையும் இரவையும் சேர்த்தார். தனது மடியில் வைத்து இரணியனை வதம் செய்த நரசிம்மர், தன் மடியில் பூமியையும் வானையும் ஒன்றாகச் சேர்த்தார்.

வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் இணைக்கும் நிலைப்படியில் வைத்து இரணியனை வதைத்ததால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் நிலைப்படியில் சேர்த்தார். நகத்தை வெட்டினால் வளர்வதால் அதற்கு உயிர் இருப்பதாகவும் கொள்ளலாம், அதை வெட்டினா லும் வலிக்காததால் உயிர் இல்லாததாகவும் கொள்ளலாம். தன் நகங்களால் கீறி இரணியனைக் கொன்று, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டையும் சேர்த்தார் நரசிம்மர்.

சிங்கம் எப்படி யானையோடு போர் புரிந்து கொண்டே, தன் சிங்கக்குட்டிக்குப் பாலும் ஊட்டுமோ,
அதுபோல் நரசிம்மர் இரணியனைக் கோபத்துடன் வதம் செய்து கொண்டே, தன் குழந்தையான பிரகலாதனிடம் கருணையையும் காட்டி அருள்புரிந்தார். இப்படிக்கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டினார் நரசிம்மர்!” என்று விளக்கினார் பட்டர். ‘தாதா’ என்றால் சேர்ப்பவர் என்று பொருள். சேராத பொருள்களை எல்லாம் சேர்ப்பவராக நரசிம்மர் விளங்குவதால், ‘ஸந்தாதா’ என்று அழைக்கப்படுகிறார்.


“ஸந்தாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பிரிந்து போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேரும் படியும், இணைந்த உறவுகள் பிரியாதிருக்கும் படியும் நரசிம்மர் அருள்புரிவார்.




Saturday, June 12, 2021

நமக்கு தேவையானவை

1. தேவையானால் மட்டும் பேசு.

2. தேவையில்லாத அறிவுரை உனக்கே பாதகமாகும்.

3. எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது.

4. சோம்பி திரியாதே.

5. தவறை திருத்தி கொள்.

6. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.



கோபம் குறைய சிறிய வழிமுறைகள்

1. பேசுவதுற்கு முன் யோசியுங்கள்.

2. கோபத்தை உடனே வெளிப்படுத்தாதீர்கள், சிறிது நேரம் அமைதியாய் இருந்து பாருங்கள்.



3. "ஆழ்ந்த சுவாசம்" போன்ற தளர்வு நுட்பங்களை பயிற்சி செய்யுங்கள்.



Monday, June 7, 2021

குறை ஒன்றும் இல்லை

ஒரு நாள் மயில் ஒன்று கடவுளை வேண்டித் தவம் இருந்தது.

மயிலின் கடுமையான தவம் கண்டு மெச்சிய கடவுள், அதன் முன் தோன்றி காட்சி கொடுத்தார்.

அழகிய மயிலே உன் தவத்தை கண்டு உள்ளம் மகிழ்ந்தோம்.

 உன் தவத்தின் நோக்கம் என்ன என்று சொல், என்றார் கடவுள்.

எனக்கு நீண்ட நாளாக ஒரு கவலை மனதுக்குள் இருந்து வாட்டுகிறது.

 சரி, என்னிடம் சொல். நான் கேட்கிறேன் என்றார் கடவுள் ஆதரவாக.

என் குரலே எனக்கு பிடிக்கவில்லை. கருப்பாய் பிறந்துள்ள குயிலுக்கு மட்டும் குரல் இனிமையாக இருக்கிறதே என மயில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது.

அழகு மயிலே உனக்கென்ன குறைச்சல், நீதான் பறவைகளில் அழகானவன்.

உன் கழுத்து அழகும்,தோகையின் அழகும் வேறு எந்த பறவைகளுக்குக்காவது படைக்கப்பட்டுள்ளதா.?

 நீ தோகை விரித்து ஆடும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாய் தெரியுமா என கடவுள் சொன்னாலும் மயில் சமாதானம் அடையவில்லை.


நீங்கள் சொல்வதுயெல்லாம் உண்மைதான் இருப்பினும்,என் குரல் இன்னும் அழகாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.பறவைகளில் எல்லாவற்றிலும் நானே முதன்மையாய் இருந்திருப்பேன் அல்லவா? என்றது மயில்.

எல்லா குணங்களும் ஒருவருக்கே அமைந்து விடாது.

குறை,நிறை இருக்கத்தான் செய்யும்.

"நிறையை கண்டு மனம் மகிழ வேண்டியதுதானே" என்றார் கடவுள்.


கழுகு வலிமையானது.

குயில் பாடும் திறன் பெற்றது.

கிளி பேசும் ஆற்றல் பெற்றது.

உனக்குத்தான் தகுதிகள் அதிகம்.

எனவே, அதை எண்ணிப் பெருமைப்படு என்று சொல்லி கடவுள் மறைந்தார்.


நீதி:

குறைகளையே காலம் முழுவதும் நினைத்து கொண்டு இருக்காமல், உன் நிறைகளை அறிந்து அதை
மேலும் நன்கு வளர்த்து கொண்டு சிறப்புடன் வாழ்வதே "இனிய வாழ்க்கையாகும்."



Saturday, June 5, 2021

தற்பெருமை கூடாது

காட்டில் சிங்கம் ஒன்று அயர்ந்து படுத்துக் தூங்கி கொண்டு இருந்தது. அப்பொழுது அதன் அருகே உள்ள மரக்கிளையில் ஒரு சேவல் ஏறி அமர்ந்திருந்தது.

அதுவரை சும்மா இருந்த சேவல் கொக்கரக்கோ எனக் கூற ஆசைப்பட்டு உடன் சத்தமாக கூவியது. 

சேவலின் கொக்கரக்கோ சத்தம் கேட்டதும் நன்றாகத் தூங்கித் கொண்டிருந்த சிங்கம் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தது.


ஒருவரையும் காணவில்லை ஆதலால் மறுபடியும் படுத்து தூங்கியது சிங்கம்.படுத்துக் தூங்கிய சிறிது நேரத்தில் மறுபடியும் சேவல் கூவியது.சேவலின் சத்தம் காரணமாக சிங்கத்தால் தூங்க முடியவில்லை.

 கலவரமடைந்து எழுந்த சிங்கம் மரத்தின் மேலே பார்த்தது, சேவல் பெருமையுடன் நின்று கொண்டு இருந்தது.

"ஏய், ஏன் இப்படி காட்டுத்தனமாக கத்துகிறாய்? என் தூக்கத்தை கெடுக்காதே" என எச்சரிக்கை செய்தது. 

நான் எவ்வளவு அழகாக பாடுகிறேன். என் பாட்டு உனக்குப் பிடிக்கவில்லை என்கிறாயே.

நான் இன்று மிகவும் மகிழிச்சியாக இருக்கிறேன். 

அதனால் பாடிக் கொண்டுதான் இருப்பேன் என்றபடி மீண்டும் கொக்கரக்கோ "என அதிக சப்தத்துடன் கூவியது.

சிங்கம் ஒரு முடிவுக்கு வந்தது.

அதன் இடத்தை மாற்றிக்கொண்டு வேறிடத்துக்கு ஓடும் பொழுது, அந்த வழியில் இருந்த ஒரு கழுதையை பார்க்காமல் ஓடியது, சிங்கம்.

 ஆனால் கழுதையோ, சிங்கம் தன்னை கண்டு தான் பயந்து ஓடுகிறது என நினைத்து கத்தியது.

சிங்கம், திரும்பி வந்து கழுதையைத் தாக்கி கொன்றது.


நீதி:  

வீண் தற்பெருமை வேதனையில் தான் முடியும்.

பூமிக்குள் :

  பூமிக்குள் 2 மைல் ஆழத்தில் தண்ணீர் கொதிக்கும். பூமிக்குள் 7 மைல் ஆழத்தில் இரும்பு உருகும் .  பூமிக்குள் 30 மைல் ஆழத்தில் பாறைகளும் உருகும்...